மருத்துவ செய்தி
திக்கு வாய் வியாதி தீர்கிறது!
[ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 08:01.27 பி.ப GMT ]
மனிதனின் சிறப்புகளில் மொழி வழக்கும் ஒன்று. பேச முடிந்தாலும் மனிதர்களில் பலருக்கு சரளமாக பேச்சு வராது. சிலருக்கு திக்கித்திக்கி பேச வரும். இது ஒரு வித வியாதி. உலகில் 1 சதவீதம் பேர் திக்கு வாய் வியாதியால் அவதிப்படுகிறார்கள்.
இவர்கள் பேசும்போது வார்த்தைகள் அரைகுறையாக வெளிவருவதோ, ஒரே வார்த்தைகள் திரும்பத் திரும்ப வருவதோ, சில வார்த்தைகள் வராமலோ இருக்கலாம். இதுபோன்ற பாதிப்புகளுக்கு காரணமான ஜீன்கள் சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்காவின் காதுகேளாமை மற்றும் உடலியல் தொடர்பு கோளாறுகள் ஆராய்ச்சி மையம் இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. பாகிஸ்தானைச் சேர்ந்த 123 பேர் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்தைச் சேர்ந்த 550 பேர் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் குறிப்பிட்ட அளவில் சாதாரணமாக பேசும் திறனுடையவர்களும் அடங்குவர்.

அவர்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில் 3 வித ஜீன்கள் திக்கிப் பேசுவதில் தொடர்புடையது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஜீன்கள்தான் ஒருவர் திக்குவாய், திக்காமல் பேசுவது, சரளமாகப் பேசுவது என ஒவ்வொன்றிலும் தொடர்பு கொண்டுள்ளது. இவற்றின் செயல்படும் விதத்தில் மாறுபாடு ஏற்பட்டால் பேச்சுத்திறனிலும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. வேறுசில வளர்ச்சிதை மாற்றத்திலும் இவை பங்காற்றுகின்றன.

இதுவரையில் திக்கு வாய் வியாதி உடையவர்களுக்கு கவலையை குறைப்பதற்கான பயிற்சியும், தெளிவாகப் பேசுவதற்கு எலக்ட்ரானிக் கருவியுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனிமேல் இந்த ஜீன்களைப் பயன்படுத்தி புதிய மருந்தை உருவாக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இனி திக்குவாய், வ..வ…வரட்டுமா? என்று போகப்போகிறது!
Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்
சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ]
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்]
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ]
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்]
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ]
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்]
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ]
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்]
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ]
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]