கைத்தொலைபேசி செய்தி
மொபைல் போன் தயாரிப்பில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள்
[ திங்கட்கிழமை, 04 சனவரி 2010, 07:11.07 பி.ப GMT ]
ஆப்பிள் நிறுவனம் ஐ–போன் தயாரித்து மொபைல் போன் பயன்பாட்டிலும் விற்பனையிலும் தனி சாதனை படைத்த பின்னர் மற்ற கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.

மொபைல் போன் நாளுக்கு நாள் முழுமையான ஒரு கம்ப்யூட்டராக இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்நாளில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கினால் இன்னும் பல கம்ப்யூட்டர் வசதிகளைப் பெரிய அளவில் மொபைல் போன்களில் எதிர்பார்க்கலாம்.

இன்டர்நெட் பிரவுஸ் செய்திடும் வசதி, இரு வழி வீடியோ கான்பரன்ஸ் வசதி, ஹை டெபனிஷன் மூவி என கம்ப்யூட்டர் இன்று வெற்றி கண்டிருக்கும் வசதிகள் பல மொபைல் போன்களில் கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகியுள்ளன.

இதனால் ஏற்கனவே மொபைல் போன் சந்தையில் தங்களை உறுதிப் படுத்திக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்களுக்கு இந்த கம்ப்யூட்டர் நிறுவனங்கள் நிச்சயம் புதிய வழி போட்டியைத் தருகின்றன. இந்த வகையில் முதலில் நுழைந்தது ஆப்பிள் நிறுவனம்.

ஏறத்தாழ ஒரே வகை போன் களுடன் தூங்கிக் கொண் டிருந்த மொபைல் போன் இண்டஸ்ட்ரியை புதிய வழிகளுக்கு இழுத்துச் சென்றது ஆப்பிள் ஐ–போன். பின் பெர்சனல் கம்ப்யூட்டரின் பல வசதிகள் மொபைல் போனுக்குள் நுழையத் தொடங்கின.

ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மொபைல் போன் தயாரிப்பில் இறங்கவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த ஏசர் நிறுவனம் எட்டு மாடல்களுடன் போன் விற்பனையில் அண்மையில் வந்துள்ளது. இன்னும் பல மாடல்கள் வர இருக்கின்றன. தூக்கிச் செல்வதற்கு எளிதாக நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரித்த அசூஸ் டெக் மொபைல் போன்களையும் வடிவமைத்து வழங்குகிறது.

ஏசர் நிறுவனம் அண்மையில் நடந்த கருத்தரங்கில் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபட தன் நிறுவனம் வெகு நாட்கள் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய திருப்பத்தில் இன்னொரு திருப்பமும் ஏற்பட்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு சிப்களை வடிவமைத்து தரும் நிறுவனங்கள் மொபைல் போன்களின் இயக்கத்திற்கான சிப்களையும் தரத் தொடங்கி உள்ளன. இன்டெல் தன் சிப்களைத் தர எல்.ஜி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கம்ப்யூட்டர்களுக்கு கிராபிக்ஸ் கார்டுகளை வடிவமைத்துத் தரும் என்விடியா நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரித்து வழங்கும் மூன்று நிறுவனங்களுக்கு தன் டெக்ரா ப்ராசசரை வடிவமைத்துத் தர முன்வந்துள்ளது. இதே வேளையில் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதிலும் போட்டி தோன்றியுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் இன்டெல் முன்னணியில் இந்த போட்டியை நடத்துகின்றன.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்
சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ]
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்]
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ]
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்]
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ]
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்]
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ]
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்]
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ]
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]