ஏனைய தொழிநுட்ப செய்தி
சிவப்பு நிற பெண்களை ஆண்கள் விரும்புவது ஏன்?
[ வியாழக்கிழமை, 29 யூலை 2010, 07:24.48 பி.ப GMT ]
“எனக்கு கொஞ்சம் கலரான பொண்ணு பாருங்க”  பெண் தேடும் படலம் ஆரம்பித்துவிட்டால், பல மாப்பிள்ளைகளின் முக்கியக் கோரிக்கை இதுதான்.

குணம், கல்வி, குடும்ப பின்னணி என்று வாழ்க்கைக்கு அவசியமான எத்தனையோ இருக்க, சிவப்பு நிறத்தில் ஏன் மோகம் அதிகமாக இருக்கிறது. `இது ஒரு குழந்தை மனபான்மை’ என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள்.

டீன் ஏஜ் பருவத்தில் பெண்களுக்கு சிவப்பு நிற சருமத்தின் மீது ஆசை வருகிறது. ஆண்களுக்கு உயரமாக வளர வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.

பெண், தனக்கு வரும் கணவன் திடகாத்திரமாகவும், உயரமாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாள். ஆணோ, தனக்கு துணைவியாக வருபவள் அழகில் சிறந்தவளாக, அதுவும் செக்கச் சிவந்த பெண்ணாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

மனோதத்துவ ரீதியாக இப்படி நிறம், உயரம் போன்றவற்றில் அக்கறை கொள்வதை `காம்ப்ளக்சன்’ என்று கூறுகிறார்கள்.

சமுதாயத்தில் இயல்பாகவே உடல்தோற்றத் திற்கு மிகுந்த மதிப்பு அளிக்கபடுகிறது. ஒரு குழந்தை பிறந்ததும் ஆணா, பெண்ணா என்று கேட்ட மறுநிமிடம் குழந்தை கறுப்பா, சிவப்பா? என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கிறது. திருமண ஊர்வலம் நடந்தாலும், `பெண் நல்ல நிறமாக இருக்கிறாளா? என்பது பற்றிய பேச்சு எழுவதை பார்க்கிறோம்.

இயல்பாக நமது மனம் இல்லாத ஒன்றை பற்றி ஏங்கும். அதை எப்படியாவது பெற வேண்டும் என்றும் விரும்பும்.

மேனி நிறத்தை மெருகூட்டுவதாக நிறைய விளம்பரங்கள் வருவது பெரும்பாலானவர்களுக்கு சிவந்த தேகத்தில் இருக்கும் அக்கறையை எடுத்துக் காட்டும் சிறந்த உதாரணமாகும். உண்மையிலேயே எந்த பொருளும் இயல்பான வண்ணத்தை மாற்றிவிடாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும் அதன்மீது உள்ள ஏக்கத்தால் அத்தகைய பொருட்களை உபயோகபடுத்தத் தொடங்குகிறோம். அப்படி நிறம் மாறிவிடுவது நிஜமென்றால் உலகில் ஒரு கறுப்பு மனிதனையும் காணவே முடியாது. ஏக்கம் கொண்டவர்களின் மனம் சமாதானம் அடைவதற்கு இந்த தயாரிப்புகள் உதவுகின்றன அவ்வளவுதான்.

சிவந்த நிறத்திற்காக ஆசைபட்டு ஒவ்வொரு தயாரிப்புக்காக மாறுவது, பெண் தேடும்போதும் நிறத்தை காரணம் காட்டி மறுத்துவிடுவது என்று காலம் நகரும்போது ஒருவித சலிப்பும், மாற்ற இயலாத காரணத்தால் ஒருவித இயலாமையும் ஏற்படும். இது மன இறுக்கத்தைக் கொடு வரும். நீண்டநாள் பாதிப்புகள் மனவியாதியாக பரிணமிக்கலாம்.

படிக்கும் பருவத்தில் அல்லது பணியாற்றும் பருவத்தில் ஏற்படும் இதுபோன்ற நிறத் தோற்ற மனபான்மை ஒருவரின் படிப்பு அல்லது முன்னேற்றத்தை பாதிப்படையச் செய்யும்.

பெற்றோர், குழந்தை பருவத்தில் இருந்தே தங்களது குழந்தையின் தோற்றம், நிறம் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்த்து வளர்த்து வந்தால் இளம் பருவத்தில் இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். ஒருவரை அழகு என்று கொண்டாடுவதும், மற்றவரை அழகற்றவர் என்று ஒதுக்கி வைப்பதும் பிற்காலத்தில் பிரச்சினைகளைத் தரலாம் என்பதால், பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
குழந்தை ரோபோ : ஜப்பானின் புதிய வரவு
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பேஸ்புக்கிற்கு போட்டியாக DIASPORA வெளிவருகிறது
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 05:57.32 பி.ப ]
சமூக வலைப்பின்னால் என்றால் எமக்கு ஞாபகம் வருவது பேஸ்புக் இணைய தளம். 500 மில்லியன் பயனர்களைக் கொண்டு இயங்கிவரும் மிகப் பிரபலமான விசாலமான வலையமைப்பு.   [மேலும்]
வெளிநாட்டில் இருப்பவருக்கு ஜீமெயில் மூலம் போன் கால் செய்யலாம்
[ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 06:30.51 பி.ப ] []
வெளிநாட்டில் இருப்பவருடன் போனில் பேச வேண்டும் என்றால இனி அதிக பணம் செலவு செய்ய வேண்டாம் ஜீமெயில் மூலம் அமெரிக்கா மற்றும் கனடாவில் இருப்பவருக்கு இலவசமாகவும் மற்ற நாடுகளில் இருப்பவருக்கு குறைந்த செலவிலும் போன் செய்யலாம். [மேலும்]
2010ஆம் ஆண்டின் சிறிய நிலவு இன்று
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:57.30 மு.ப ]
2010ஆம் ஆண்டுக்கான மிகச் சிறிய பௌர்ணமி நிலவு இ‌ன்றைய தினம் வானில் தென்படும் என 'ஸ்பேஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது. [மேலும்]
குளிர் காய்ச்சல் பரவும் நேரம் இது!
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:56.56 பி.ப ]
இப்போது குளிர் காய்ச்சல் வரும் நேரமே அல்ல. குளிர் காலத்தில் தான் இது வரும். ஆனால், இப்போது பறவைச் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்று, மெக்சிகோ, அமெரிக்கா, கனடா, நெதர்லாந்து, இஸ்ரேல், பிரிட்டன், டென்மார்க், ஜெர்மன் ஆகிய நாடுகளைத் தாக்கியது இப்போது இந்தியாவை பதம் பார்க்கிறது. [மேலும்]
படுக்கை அறையில் பெண்களிற்கு ஏற்படும் கொடுமைகள்
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 08:51.19 பி.ப ]
ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் சரி திருமணமான பின் உங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது என கேட்டால் சில ஆண்கள் கன்னம் சிவக்கிற அழவற்கு அடி தருவாங்க, சிலர் இருங்கிறாங்கப்பா காது கிழியிற அழவுக்கு கூடாத வசனங்களால திட்டுவாங்க. பெண்கள் தங்களது பிரச்சனைகளை வெளிக்காட்டுவது கிடையாது. [மேலும்]