மென்பொருள் செய்தி
900 மில். டாலர் மென்பொருள் திருட்டு கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2009, 06:54.23 மு.ப GMT ]
பத்து ஆண்டுகளுக்கு முன் 21 விதமான மைக்ரோசாஃப்ட் புரோகிராம்கள் உலகம் முழுதும் புழக்கத்திற்கு வந்தன.உடனேயே 12க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள கணினிகளில் சட்டவிரோத விண்டோஸ் மற்றும் ஆஃபீஸ் நகல்கள் குடிபுகுந்தன.

இதனால் அந்த கணினிகளுக்கு வைரஸ் உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகள் அதிக அளவில் ஏற்பட்டதாக மைக்ரோசாஃப்ட் எச்சரித்திருந்தது.

2001-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் சுங்கத் துறையினர் அமெரிக்காவிற்கு வந்த ஒரு ஷிப்பிங் கன்டெய்னரை திறந்து பார்த்தபோது 100 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய திருட்டு மென்பொருட்களும் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தின் 31,000 நகல்களும் அதில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு மைக்ரோசாஃட் தனது விசாரணையை 22 நாடுகளின் பக்கம் முடுக்கி விட்டது. உள்நாட்டு சட்டட் அமலாக்கப் பிரிவினர் கடுமையாக அதிரடி சோதனைகளை மேற்கொண்டு மென்பொருள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டுகளுக்காக சிலரை கைதும் செய்தனர்.

தைவான் நீதிமன்றம் கடந்த டிசம்பரில் இது தொடர்பான வழக்கில் முக்கியமான தண்டனை தீர்ப்பு ஒன்றையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விசாரணையின் மூலம் கைப்பற்றப்பட்ட திருட்டு மென்பொருள்களின் சில்லரை விற்பனை மதிப்பு 900 மில்லியன் டாலர்கள் என மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த கண்டுபிடிப்புகளினால் திருட்டு மென்பொருள் நடவடிக்கைகள் குறைந்து விடாது என்று கூறிய மைக்ரோசாஃப்ட், இது ஒரு துவக்கமே என்று கூறியுள்ளது. ஆனால் இனிமேல் மென்பொருள் திருட்டை நடத்துபவர்கள் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்பது உண்மை.

ஆனால் நகல்கள் உண்மையில் அசல் போலவே இருந்தது என்றும், அதனை நகல்கல் என்பதை உறுதி செய்ய ஏகப்பட்ட விஞ்ஞான, தடய அறிவியல்களை பயன்படுத்த நேரிட்டது என்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் டேவிட் ஃபின் தெரிவித்துள்ளார்.

மென்பொருள் திருட்டு விற்பனையை கண்டுபிடிக்க 80 உறுப்பினர்கள் கொண்ட குழு, உலகம் முழுதும் நியமிக்கப்பட்டது. இவர்கள் சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து பரிசோதனை முயற்சியாக சில டிஸ்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் கறுப்புச் சந்தை விநியோக சங்கிலித் தொடர் ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த வழக்கறிஞர் கூறுகிறார்.

தைபே நகர காவல்துறையினர் சின்வே டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டு 126 மில்லியன் டாலர் மதிப்புள்ள சட்ட விரோத மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். 2001ல் ஏற்கனவே தைவான் நீதித்துறை அமைச்சகத்தினர் சுங்டெக் நிறுவனத்தை சோதனை செய்து 100 மில்லியன் டாலர் திருட்டு டிஸ்குகளை பறிமுதல் செய்தனர்.

கடைசியாக 2007ம் ஆண்டு சுங்டெக் மற்றும் சின்வே நிறுவனங்களின் உரிமையாளரை கைது செய்து, அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த திருட்டு சமாச்சாரங்களை விநியோகித்தவருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

சீனாவில் பொதுப் பாதுகாப்புக் கழகத்தினர் ஷாங் ஷெங் என்ற ஷிப்பிங் நிறுவனத்தை ரெய்டு செய்து அதன் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த அதிரடி சோதனையின் விளைவாக அமெரிக்காவில் 35 பேர் உட்பட பலர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இதில் தைவான் போலிகளை விற்ற லிசா சென் என்பவர் அகப்பட்டுக் கொண்டபோது, 2002ம் ஆண்டு அவருக்கு 9 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அதிரடி நடவடிக்கைகள் ஒரு துவக்கம்தான் இன்னமும் கூட மைக்ரோசாஃப்டின் சமீபத்திய மென்பொருட்களின் சட்ட விரோத நகலகள் புழங்கிக் கொண்டுதான் இருக்கின்றன, ஒரு நிமிடம் கூட இந்த விவகாரத்தில் கடைசி அத்தியாயம் எழுதப்ப்ட்டு விட்டதாய் தன்னால் யோசிக்க முடியாது என்கிறார் வழக்கறிஞர் டேவிட் ஃபின்.

"MsN"

Print Send Feedback

Share/Bookmark
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
எச்.ஐ.வி.யை குணப்படுத்தும் புதிய மாத்திரை
பேஸ்புக் கணக்கை Remote logout செய்ய
மூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகள் உடலில் கொழுப்புசத்தை அதிகரிக்கும் நோன்ஸ்டிக் பாத்திர சமையல்
சூரிய ஒளி முகசுருக்கத்தை ஏற்படுத்தும் : ஆய்வில் கண்டுபிடிப்பு
பெண்களுக்கும் வரும் நோய்கள் என்னென்ன?
அதிகாலை நிகழ்த்தும் அற்புதங்கள்
15வது ஆண்டில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்
உலகின் அதிவேக விரைவுக் கணினி
பிரபஞ்சத்தை உருவாக்கியவர் கடவுள் அல்ல இயற்பியலே : ஸ்டீபன் ஹாக்கிங்
 
   
   
 
Apple's iPhone
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இன்டெல் நிறுவனத்தின் ஆபாரமான கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 07:35.40 பி.ப ]
கணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர்.அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. [மேலும்]
ஐ-போன் 4 வருகிறது : தமிழை ஒருபடி உயர்த்த போகிறது
[ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 08:14.00 பி.ப ]
எதிர்வரும் செப்தெம்பரில் ‘ஐ-போன் 4’ எனப்படும் புதுவகை கையடக்க இணைய பேசி மலேசியாவில் அறிமுகம் காண விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஆங்கிலத்திலும் சிறப்பாகத் தமிழ்மொழியிலும் செயல்படும் ஆற்றல் கொண்டது என அறியப்படுகிறது. [மேலும்]
திருமணமான ஆண்களிடம் பெண்கள் மயங்குவது ஏன்?
[ திங்கட்கிழமை, 30 ஓகஸ்ட் 2010, 02:25.57 பி.ப ]
காதல் யாருக்கும் வரும். யார் மீதும் வரும். காதலுக்குக் கண்ணில்லை என்பதற்கு திருமணமான ஆண்கள் மீது பெண்களுக்கு ஏற்படும் காதல் ஒரு உதாரணம். [மேலும்]
வந்துவிட்டது கனவுலக விமானம் 'டிரீம்லைனர்'
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:14.57 பி.ப ]
பல ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட, போயிங் நிறுவனத்தின் “கனவுலக’ விமானமான “போயிங் 787 டிரீம்லைனர்’ விமானம் சமீபத்தில் வெள்ளோட்டம் விடப்பட்டது. [மேலும்]
உடலுக்கு ஊறுவிளைவிக்கும் மதுவும் புகைத்தலும்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:58.14 மு.ப ]
இன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியில் மது அருந்துதல், புகைத்தல் ஆகியன ஒரு பஷனாக மாறிவிட்ட நிலையில் விருந்துபசாரம் போன்ற களியாட்ட நிகழ்வுகளில் மதுபான வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றன. [மேலும்]